திருச்சி நவலூர் குட்டப்பட்டு பகுதியை சோ்ந்தவா் சுரேஷ் வயது (39). இவர் கடந்த 15ஆம் தேதி இரவு அப்பகுதியில் உள்ள ஸ்ரீ அக்ஷ்யா அரிசி கடை முன்பு தன்னுடைய இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பணிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் மறுநாள் காலை வண்டியை எடுப்பதற்காக வந்து பார்த்த போது வண்டி திருடப்பட்டது குறித்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக மணிகண்டம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் திருச்சி புத்தூர் வண்ணாரப்பேட்டை பகுதியை சோ்ந்த ஸ்ரீகாந்த் வயது (19), விக்னேஷ் வயது (20) இரு வாலிபர்களையும் மணிகண்டம் போலீசார் கைது செய்தனா். மேலும் அவா்களிடம் இருந்து 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் 4 கிராம் எடையுள்ள உருக்கிய தக்க கட்டி உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *