திருச்சி இ.பி.ரோடு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி காவியா ( வயது 22). இவர்கள் கடந்த 2019-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

காவியாவிற்கு குழந்தை இல்லை இதனால் விரக்தியில் இருந்து வந்தார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது உத்திரத்தில் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *