திருச்சி மாவட்டம் , ஸ்ரீரங்கம் ” அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் சித்திரைத் தேர்த்திருவிழாவினை முன்னிட்டு வருகின்ற 29ம் தேதி வெள்ளிக்கிழமையன்று உள்ளுர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது . இத்தேர்த்திருவிழாவினை முன்னிட்டு , திருச்சி மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் இது பொருந்தும் .

எனினும் பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகள் நடைபெறுவதில் இந்த விடுமுறை பொருந்தாது . மேற்கண்ட விடுமுறை நாளில் மாவட்டத்தில் அரசு பாதுகாப்பு தொடர்பான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்கள் , கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் . இந்த விடுமுறைக்குப் பதிலாக அடுத்த மாதம் வருகின்ற 07.05.2022 அன்று சனிக்கிழமை வேலைநாளாக அறிவிக்கப்படுகிறது . மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தெரிவித்துள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *