திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஷகிருதீன். இவரது மகள் ஜாக்கின் பர்வீன்(39). இவர் கணவரை பிரிந்து தனது மகனுடன் தன்னுடய பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் பர்வீனுக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மனநல மையத்தில் சிகிச்சை பெறுவதற்காக தன்னுடைய சகோதரியின் வீட்டில் வந்து தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று நத்தர்ஷா பள்ளிவாசலுக்கு வந்தவர், அங்கு எலிமருந்தை(விஷம்) தின்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின்பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்