திருச்சி கருமண்டபம் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் குருசாமி. இவரது மகன் ரஞ்சித் (வயது 26) இவர் கருமண்டபம் பஞ்சாயத்து யூனியன் பள்ளி அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் இவரிடம் கத்திமுனையில் மிரட்டி பணத்தை பறித்துச் சென்றுவிட்டனர்.இது குறித்து ரஞ்சித் கண்டோன்மெண்ட் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் வழக்கு பதிந்து பிரபாகரன் ,கங்காதரன் ஆகிய இரண்டு வாலிபர்களை கைது செய்தனர் .அவர்களிடம் இருந்து ஒரு கத்தியை பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் ஏர்போர்ட் பகுதியில் நாகப்பா என்பவரிடம் பணம் பறித்ததாக சரத் என்ற வாலிபரையும், அரியமங்கலம் பகுதியில் முகமது இஸ்மாயில் என்பவரிடம் பணம் பறித்ததாக குலா தஸ்தகீர் என்ற வாலிபரையும்,

 

திருவரங்கம் பகுதியில் கார்த்திக் என்பவரிடம் பணம் பறித்ததாக சித்திக் என்ற வாலிபரையும் போலீசார் அடுத்தடுத்து கைது செய்தனர். இதில் சரத், குலா தஸ்தகீர் ஆகியோர் ரவுடி பட்டியலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் திருச்சி உறையூர் பகுதியில் இப்ராகிம் என்ற வாலிபரிடம் கத்தி முனையில் மிரட்டி பணம் பறித்ததாக நிமல் பாரதி என்ற வாலிபரை உறையூர் போலீசார் கைது செய்தனர் இவரும் ரவுடி பட்டியலில் உள்ளது குறிப்பிடத்தக்கது. திருச்சி மாநகரில் கத்தி முனையில் வழிப்பறி செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்ற வருகிறது. இந்த தொடர் சம்பவங்களால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்த குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *