திருச்சி செந்தநீர்புரம் முத்துமணி டவுன் ஆஞ்சநேயர் கோவில் அருகே உள்ள பெட்டி கடை உரிமையாளரிடம் கடந்த சில நாட்களுக்கு முன் இரு வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி ரூபாய் 1100 பணத்தை பறித்து சென்றதாக பொன்மலை காவல் நிலையத்தில் கடை உரிமையாளர் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் தினேஷ் குமார் என்கிற குண்டுமணி வயது 27 மற்றும் அய்யப்ப மணிகண்டன் வயது 27 ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இந்த இரு வாலிபர்கள் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் இந்த 2 ரவுடிகளும் பொதுமக்களை அச்சுறுத்தி பணம் பறிப்பவர்கள் என விசாரணையில் தெரிய வந்தது. அதனை தொடர்ந்து பொன்மலை காவல் நிலைய ஆய்வாளர் கொடுத்த அறிக்கையின்படி திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் ரவுடிகள் இருவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனைத் தொடர்ந்து இரு ரவுடிகளையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *