திருச்சி தாராநல்லூர் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் சிவச்சந்திரன் வயது 36 இவர் நேற்று என்.எஸ்.பி ரோட்டில் எலக்ட்ரிக் பொருட்கள் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு செல்வதற்காக தெப்பக்குளம் பஸ் ஸ்டாப்பில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது திடீரென அங்கு வந்து வாலிபர் ஒருவர் சிவசந்திரனிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரது சட்டப் பையில் இருந்து 500 ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் எடுத்தார்.

இது குறித்து திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் திருச்சி தென்னூர் ஆழ்வார்தோப்பு சின்னசாமி நகரை சேர்ந்த ரவுடி சதாம் உசேன் வயது 21 என்பது தெரிய வந்தது. மேலும் ரவுடி சதாம் உசேன் மீது தில்லை நகர் காவல் நிலையம், பாலக்கரை காவல் நிலையம் மற்றும் செசன்ஸ் கோர்ட் காவல் நிலையம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து கோட்டை காவல் நிலைய போலீசார் ரவுடி சதாம் உசேனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *