திருச்சி சங்கிலியாண்டபுரம் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் பூபதி. இவரது மகன் கங்காதரன்.( வயது 27). பெயிண்டர். இவர் காஜாபேட்டை மெயின் ரோட்டில் ஒரு மருத்துவமனை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை கத்திமுனையில் வாலிபர் ஒருவர் வழிமறித்து, பணத்தை பறித்து விட்டு ஓடிவிட்டார் .

இதுகுறித்த புகாரின் பெயரில் பாலக்கரை குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் வழக்கு பதிவு செய்து பாலக்கரை காஜா பேட்டை பகுதியை சேர்ந்த விமல்ராஜ் என்ற வாலிபரை கைது செய்துவிசாரணை நடத்தி வருகிறார். அவரிடமிருந்து கத்தி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *