திருச்சி மாவட்டத்தில் மதுவிலக்கு தொடா்பான வழக்குகளில் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட 91 இருசக்கர வாகனங்கள், 3 நான்கு சக்கர வாகனங்கள் இரண்டு ஆட்டோக்கள் என 96 வாகனங்கள் இன்று திருச்சி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுஜாதா தலைமையில் சுப்ரமணிய புரத்திலுள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் விடப்பட்டது.

இதில் முன்வைப்புத் தொகையாக இருசக்கர வாகனங்களுக்கு ரூ. 2000, நான்குச் சக்கர வாகனங்களுக்கு ரூ.12,000 செலுத்தி ஏலம் கோரினர். இதில் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுக்கு வேண்டிய வாகனத்தை ஏலம் கேட்டு பணம் செலுத்தி எடுத்துச் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *