திருச்சி,தென்னூர், காமராஜ் நகரில் உள்ள குடிநீர்க்குழாய் பல மாதங்களாக பழுதடைந்து உபயோகமற்று கிடக்கின்றது. இதனை சரிசெய்து கொடுக்கும்படி பல முறை மனு அளித்தும் மாநகராட்சி நிர்வாகம் சரி செய்து கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் இன்று காலை அப்பகுதி மக்களைத் திரட்டி பழுதடைந்து உபயோகமற்றுப் போன குடிநீர்க் குழாய்க்கு பால் ஊற்றி படையல் போடும் நூதன போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு ஜங்ஷன் பகுதிக்குழு உறுப்பினர் வள்ளி தலைமை தாங்கினார்.

இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரேணுகா, ஜங்ஷன் பகுதிச் செயலாளர் ரபிக் அஹமது, பகுதிக்குழு உறுப்பினர்கள் அப்துல் கையூம், ஷேக் மொய்தீன், விஜய்,கிளை செயலாளர்கள் முருகன், அக்பர் அலி, கவிதா, ரேவதி, கிருஷ்ணகுமார் மற்றும் அப்பகுதி பெண்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *