திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பனையக்குறிச்சியை சேர்ந்தவர் ஜெயபால். கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி இறந்த விட்டார் இவருக்கு பிரதாப் என்கிற ஆறு வயது மகன் உள்ளார். கூலித் தொழிலான ஜெயபால் மது போதைக்கு அடிமை அடிமையானவர் என கூறப்படுகிறது. மேலும் இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தளபதி, ஹரி, மாசி ,சுந்தர் ரகு ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை ஜெயபால் வழக்கம் போல் மது போதையில் தனது வீட்டருகே நின்று கொண்டு ஆபாச வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது வெளியே வந்த சுந்தர் அவரது நண்பர்கள் நான்கு பேரும் தட்டி கேட்டபோது ஜெயபால் தான் வைத்திருந்த கத்தியால் அவர்களை வெட்ட முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கும்பல் ஜெயபாலை ஓட ஓட விரட்டி இடுப்பு மற்றும் கழுத்து பகுதியில் கத்தியால் குத்தியதுடன் அவரது நெஞ்சில் பெரிய கல்லை தூக்கி போட்டு கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருவரம்பூர் போலீசார் மற்றும் எஸ் பி சுஜித் குமார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் லிலி (Lily) மோப்ப நாய் வரவழைக்கப் பட்டது. ஐந்து பேர் கொண்ட கும்பலால் குளித்தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *