திருவனணைக்கோவில் 4வது வார்டு பகுதிக்குட்பட்ட ராகவேந்திரா கார்டனில் உள்ள கீழ்வீட்டில் குடியிருப்பவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக வெளியூர் சென்றிருந்தனர். இந்நிலையில் வீடு பூட்டியிருப்பதை நோட்டம் விட்டு நள்ளிரவு (28−06−2021 சுமார் 01−30மணி அளவில் மர்ம நபர்கள் சிலர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே செல்ல முயற்சி செய்துள்ளனர். சத்தம்கேட்டு அருகில் உள்ள வீட்டுக்காரா்கள் கதவை திறந்து வெளியில் வந்து பார்ப்பதற்குள் திருடர்கள் தாங்கள் வந்த வாகனத்தை சாவியோடு விட்டு விட்டு ஓடிவிட்டனர். உடனே அருகில் குடியிருந்தவர்கள் ஶ்ரீரங்கம் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்