திருச்சி பொன்மலைப்பட்டியை சேர்ந்தவர் முகமது அப்துல் காதர் வயது (53) இவர் செருப்பு கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இவர் இன்று காலை பொன் மலைப்பட்டி ஆஞ்சநேயர் கோவில் அருகே நடந்து சென்ற போது அப்போது அங்கு வந்த மேலகல்கண்டார் கோட்டையைச் சேர்ந்த இளவரசன் (29), பொன்மலை அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த ராஜா என்கிற கோப்பு ராஜா (26), பொன்மலைப்பட்டி மதுரை வீரன் கோவில் தெருவை சேர்ந்த தங்கமணி என்கிற டேஞ்சர் மணி (32), மேல கல்கண்டார் கோட்டை விவேகானந்தா நகரை சேர்ந்த ராம்குமார் (32) ஆகிய 5 பேரும் சேர்ந்து முகமது அப்துல் காதரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூபாய் ஆயிரம் பணம் பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து முகமது அப்துல் காதர் பொன்மலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *