திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தாலுகா அருகில் தீராம்பாளையத்தில் இருந்து தனியார் பால் நிறுவனத்திற்கு பால் ஏற்றிசென்ற டாட்டா ஏஸ் பால் வாகனம், தீராம்பாளையத்தில் இருந்து பழையூர் செல்லும் சாலையில் கிராம சுகாதார நிலையம் அருகில் அதிவேகமாக சென்று கொண்டிருந்த போது, டிரைவரின் கவனக்குறைவால் எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் இருசக்கர வாகனத்தில் வந்த அழகியமணவாளம் கைகாட்டியை சேர்ந்த ரமேஷ் (37) என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்த்திருந்த உளுந்தங்குடி வடக்குதோட்டம் கிராமத்தை சேர்ந்த ராஜமாணிக்கம்(50) என்பவர் கடுமையான காயங்களுடன் ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பட்டார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அழித்து வருகின்றனர்..

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மண்ணச்சநல்லூர் காவல் ஆய்வாளர் ரமேஷ் குமார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் விபத்து குறித்து விசாரணை செய்து உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய டிரைவர் குறித்தும் விசாரித்து வருகின்றனர். பால் வண்டி ஓட்டுனரின் ஜாக்கிரதையால் ஓருவர் உயிர் பலியானதால் கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *