திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆங்கரை என்ற இடத்தில் வடிகால் வாய்க்கால் கட்டுமான பணிகள் கடந்த ஐந்து மாதத்திற்கு முன் தொடங்கப்பட்டது. இந்தப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் திருச்சி லால்குடி சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இந்தச் சூழலில் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் சாலைகளில் கழிவு நீர் வழிந்தோடி கொண்டிருக்கிறது. கழிவு நீர் சாலையில் வழிந்தோடுவதால் இப்பகுதியில் துர்நாற்றமும் வீசி சுகாதாரக் கேடும் ஏற்பட்டு வருகிறது.ஸஎனவே இப்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும் பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *