திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், நீர்வளத் துறையின் சார்பில் ஆற்று பாதுகாப்புக் கோட்டம் மற்றும் அரியாறு வடிநிலக் கோட்டங்களுக்குட்பட்ட ஆறுகள், ஏரிகள், கால்வாய்கள் தூர்வாருதல் என ரூபாய் 18.75 கோடி மதிப்பில் 90 பணிகளை தொடங்கி வைக்கின்ற வகையில் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு. கே. என். நேரு அவர்கள், இன்று (23.4.22) திருச்சிராப்பள்ளி வயலூர் சாலையில் உள்ள குடமுருட்டியாற்றில் (உய்யகொண்டான் பாலம்) ஆறு தூர்வாரும் பணியினை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசுதலைமைப் பொறியாளர் இராமமூர்த்தி, வணக்கத்திற்குரிய மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், கதிரவன், மாவட்டப் பிரமுகர் வைரமணி, கண்காணிப்புப் பொறியாளர் திருவேட்டைச்செல்லம், மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான், செயற்பொறியாளர்கள் மணிமோகன், நித்யானந்தன் உதவி செயற்பொறியாளர்கள் ஜெயராமன், தயாளகுமார் மற்றும் பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *