மாவட்ட குடும்ப நலச் செயலகத்தின் சார்பில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வுப் பேரணி திருச்சி செயின்ட் ஜான் வெஸ்ட்ரி பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கி கலெக்டர் அலுவலகம் சாலை வழியாக சென்று கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ கல்லூரியில் நிறைவடைந்தது. இந்த உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வுப் பேரணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்துப் பங்கேற்றார். இந்நிகழ்வின் போது இணை இயக்குனர் (நலப்பணிகள்)  டாக்டர். லட்சுமி, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் மற்றும் குடும்ப நல துணை இயக்குனர் ( பொ ) டாக்டர்‌.சாந்தி, கி.ஆ.பெ.விசுவநாதம் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர்.நேரு மாவட்ட காசநோய் அலுவலர் டாக்டர். சாவித்திரி மற்றும் பயிற்சி மருத்துவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *