தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளையொட்டி, மாநில இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி அவர்களின் வழிகாட்டுதலின்படி கடந்த 2020 ஆண்டு முதல் தமிழகம் முழுவதும் மண்டல வாரியாக கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் திருச்சி மண்டல அளவில் இன்று நடைபெற்ற போட்டியில் திருச்சி அணியும் தஞ்சாவூர் அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.

இதில் தஞ்சாவூர் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் திருச்சி அணியை வீழ்த்தி முதலிடத்தைப் பிடித்தது. இதன் மூலம் சென்னையில் நடைபெற உள்ள இறுதி போட்டியில் தஞ்சை அணி கலந்து கொள்கிறது.

வெற்றி பெற்ற அணிகளுக்கு முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி துணை செயலாளர் பைந்தமிழ் பாரி திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வெங்கடேஷ், தஞ்சாவூர் மேயர் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *