பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து திருச்சி மாவட்ட மக்கள் உரிமை கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே இன்று நடந்தது.

 இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முகமது காசிம் தலைமை தாங்கினார். ஜனநாயக சமூக நல கூட்டமைப்பின் தலைவர் சம்சுதீன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் சின்னதுரை, சமூக நீதிப் பேரவை மாநில தலைவர் ரவிக்குமார், தந்தை பெரியார் திராவிட கழக மாநில கொள்கை பரப்பு செயலாளர் விடுதலை அரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மக்கள் உரிமை கூட்டணியின் மாநில தலைவர் தென்பாண்டியன் கண்டன உரையாற்றினார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, சாமானிய மக்கள் கட்சி, மருத மக்கள் முன்னேற்ற கழகம், தமிழ் புலிகள் கட்சி, கருச்சிறுத்தை கட்சி, தாய் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *