திருச்சி கே.கே.நகர் மாநகர ஆயுதப்படை வளாகத்தில் உள்ள ரைபிள் கிளப் இந்திய ரைபிள் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இங்கு 47வது மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கி சுடுதல் பிரிவுகளில் நடைபெற உள்ளது.ஜூலை 24ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து 1300 பேர் கலந்து

கொள்கின்றனர். திருச்சியில் முதல் முறையாக நடத்தப்படும் இந்த போட்டியின் தொடக்க விழா கடந்த 24ம் தேதி நடைபெற்றது. விழாவில் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், காவல்துறை கமிஷனர் கார்த்திகேயன், மத்திய மண்டல ஐஜி சந்தோஷ்குமார், திருச்சி ரைபிள் கிளப் ஒருங்கிணைப்பு செயலாளர் செந்துார் செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு துவங்கி வைத்தனர்.

இந்நிலையில் மூன்றாவது நாளாக நடைபெறும் இந்த போட்டியில் இன்று நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டுள்ளார்.

இந்த துப்பாக்கி சுடும் போட்டியில் 50,25,10 மீட்டர் பிஸ்டல் சுடும் போட்டிகளில் நடிகர் அஜித்குமார் கலந்து கொள்கிறார். 50 மீட்டர், 25 மீட்டர் போட்டிகளில் கலந்துகொண்ட அவர் 2மணிக்கு நடைபெறும் 10 மீட்டர் , பிஸ்டல் சுடும் போட்டியில் கலந்து கொள்ள உள்ளார். திருச்சியில் நடிகர் அஜித்குமார் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்ட தகவல் பரவிய நிலையில் கேகே நகர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட ரசிகர்கள் வெளியே திரண்டு வருகின்றனர். அவர்களை போலீசார் களைத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *