திருச்சி மாநகராட்சி மைய வளாகத்தில் மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு தலைமையில் இன்று நடைபெற்றது.. இக்கூட்டத்தில் மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் குடிநீர், பாதாள சாக்கடை திட்டப் பணிகள்,சீர்மிகு நகரத்திட்ட பணிகள் மற்றும் அம்ரூத் பாதாள சாக்கடை திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது..

மேலும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்படுவதால் விரைந்து பணிகளை முடிக்க அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு உத்தரவிட்டார். இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன்,துணை மேயர் திவ்யா, நகர பொறியாளர் சிவபாதம், மண்டல தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *