கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் நாளை முதல் தமிழகத்தில் 23 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து இயக்கப்படும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதன் காரணமாக திருச்சி மாவட்டத்தில் உள்ள 14 பணிமனைகளில் பேருந்துகளை சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கண்டோன்மெண்ட் புறநகர் போக்குவரத்து பணிமனையில் உள்ள பேருந்துகளை பணிமனை ஊழியர்கள் தண்ணீரை பீச்சி அடித்தும், கிருமி நாசினி தெளித்தும் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்கு கிருமி நாசினி வழங்குவதற்காக கிருமி நாசினிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்