தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 19-ம்தேதி நடைபெற உள்ளது முன்னதாக தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் ஜல்லிக்கட்டு ராஜேஷ் நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னதாக தென்னூர் உழவர் சந்தை அருகே இருந்து ஏராளமானோர் ஜல்லிக்கட்டு காளைகளுடன் ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர் இதையடுத்து தேர்தல் நடத்தை விதியை மீறியதாக நாம் தமிழர் கட்சி மாநில கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் உட்பட 160 பேர் மீது திருச்சி தில்லை நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *