திருச்சி ஸ்ரீரங்கம் விரேஸ்வரம் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்ற மின்பொறியாளர் ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி , இருசக்கர வாகனம் மற்றும் ரூ .2000 / – பணத்தை பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து . வழக்கின் சம்மந்தப்பட்ட ரவுடி மகாமுனி வயது 36 என்ற வாலிபரை கைது செய்தனர். மேலும் விசாரணையில் குற்றவாளி மீது திருச்சி மாவட்ட காவல் நிலையங்களில் கஞ்சா வழக்கு உட்பட 19 வழக்கும் , திருச்சி மாநகர காவல் நிலையங்களில் கஞ்சா மற்றும் திருட்டு வழக்கு உட்பட 6 வழக்கும் ( மொத்தம் 25 வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது . ( ரவுடி ) மகாமுனி தொடர்ந்து இளைஞர்களை சீரழிக்கும் கஞ்சா போதை பொருளை விற்பனை செய்து வருவதும் , பொதுமக்களை அச்சுறுத்தி பணம் பறிப்பவர் எனவும் . தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவர் என விசாரணையில் தெரிய வந்தது, மேலும் ரவுடி யின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து , திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் ரவுடி மகாமுனியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். மேலும் திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *