திருச்சி கொட்டப்பட்டு இந்திராநகர் பகுதியில் உள்ள மத்திய சிறைச்சாலை காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் பூர்வினா வயது 40 இவர் மகளிர் சிறைச்சாலையில் ஜெயில் வார்டன் ஆக உள்ளார். இவரது கணவர் செந்தில்குமார் வயது 41. இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் குடியிருப்பில் திடீரென நெஞ்சு வலியால் மயங்கி விழுந்தார். உடனே அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *