தமிழகத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பு அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்த நிலையில் , இன்று முதல் நியாயவிலைக் கடைகளில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு பொருட்களை சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி தொடங்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு 2,15,48,060 குடும்பங்களுக்கு மொத்தம் 1,088 கோடி ரூபாய் செலவில் வழங்கப்பட உள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் நடைப்பெற்று இன்று காலை திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோவில் அருகே உள்ள நியாய விலை கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசை நகர்புற நலத்துறை அமைச்சர் கே என் நேரு வழங்கினார். அருகில் மாவட்ட கலெக்டர் சிவராசு, முன்னாள் துணை மேயர் அன்பழகன், மாவட்ட துணைத் செயலாளர் முத்துச்செல்வம், காஜா மலை பகுதி செயலாளர் காஜாமலை விஜி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *