புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியைச் சேர்ந்தவர் சேவியர் இன்று புத்தாண்டு தினத்தையொட்டி துறையூர் பகுதியில் உள்ள அவரின் குலத்தெய்வ கோயிலுக்கு சாமி கும்பிடுவதற்காக குடும்பத்துடன் காரில் சென்றார். மேலும் இந்தக் காரை அவரது மகன் டேனியல் ரூபன் திருச்சி கொள்ளிடம் பாலத்தில் காரை ஓட்டி சென்று கொண்டிருந்த பொழுது அப்போது எதிர் பாராத விதமாக காருக்கு பின்னால் வந்த ஈச்சர் வேன் மோதியதில் சேவியர் சென்ற கார் விபத்துக்குள்ளாகி கொள்ளிட பாலத்தின் தடுப்பு கட்டையில் மோதி நின்றது.

 இந்த காரில் பயணம் செய்த , சேவியர் அவரது மகன் டேனியல் ரூபன் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட ஆறு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்தால் கொள்ளிடம் பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதேசி பெருவிழா நடைபெற்று வருவதாலும்,

காவேரி மேம்பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் திருச்சி சென்னை பைபாஸ் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொள்ளிடம் பாலத்தில் நடந்த இந்த கார் விபத்தால் கடந்த இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *