தமிழ்நாடு அரசு திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் தொடர்பான புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. அதன் படி இரு சக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணியாவிட்டால் ரூ.1000 அபராதமும், அதிவேகமாக வாகனங்கள் ஓட்டுபவர்களுக்கு முதன்முறை ரூ.1000, 2-வது முறை ரூ.10 ஆயிரம் அபராதமும், அதேபோல் அவசர ஊர்திகளான ஆம்புலன்ஸ், தீயணைப்பு போன்ற வாகனங்களுக்கு வழிவிட மறுத்தால் ரூ.10 ஆயிரம் அபராதமும்,

முறையான வண்டி எண்கள் இல்லாத வாகனங்களுக்கு முதன் முறை ரூ.2,500 அபராதமும், 2-வது முறை ரூ.5 ஆயிரம் அபராதமும், போக்குவரத்து விதிகளை மதிக்காமல் சாலையை கடப்பவர்களுக்கு ரூ.500 அபராதமும்,சீட் பெல்ட் அணியாமல் சென்றால் ரூ.1000 அபராதமும், அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தினாலோ அல்லது, அதிக புகையுடன் வாகனங்களை ஓட்டி சென்றாலோ ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் படி திருச்சி மாநகரில் இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் தலைகவசம், சீட் பெல்ட் உரிய ஆவணங்கள் இல்லாத வாகன ஓட்டிகள் மற்றும் சாலை விதியை மீறுபவர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் வசூலித்து வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *