SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதி அந்தநல்லூர் ஒன்றியம் சிறுகமணி மேற்கு கிராம அலுவலர் மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் பெட்டவாய்த்தலை பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் கொடிகம்பத்தை ஒரு சிலரின் தூண்டுதலின் பெயரில் முன்னறிவிப்பின்றி அகற்றிய அதிகாரிகளை கண்டித்து பெட்டவாய்த்தலை பகுதியில் இன்று மாலை சாலை எஸ்டிபிஐ கட்சி சார்பாக மாவட்ட தலைவர் திருச்சி முபாரக் அலி அவர்கள் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இந்த சாலைமறியல் போராட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் பிச்சைக்கனி, மாவட்ட செயலாளர் ஏர்போர்ட் மஜீத், மாவட்ட செயலாளர் மதர் ஜமால், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அப்பாஸ், மர்சூத் ஆகியோர்களும், சமுக ஊடக அணி மண்டல தலைவர் ரியாஸ், கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜிஸ், பெட்டவாய்த்தலை கிளைத்தலைவர் யாசர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கொடி கம்பத்தை கலட்டிய ஸ்ரீரங்கம் கிராம அலுவலரை கண்டித்தும், காவல்துறையை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டு சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு தொகுதி, கிளை நிர்வாகிகளும், செயல் வீரர்களும், பொதுமக்களும் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட 60 நபர்களுக்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு மஹாலில் அடைத்து வைக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்