லால்குடி சட்டமன்றத் தொகுதியின் தின்னியம் – மனக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த அந்தோனிராஜ் எற்பவரின் மகன் ராணுவ வீரர் தேவ் ஆனந்த். 24 வயதான இவர் சிக்கிம் மாநிலத்தில் நடந்த வாகன விபத்தில் உயிரிழந்தார். இந்த செய்தி கேட்டு அவரது பெற்றோர் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவை அணுகி ராணுவ வீரர் தேவ் ஆனந்த் உடலை சொந்த ஊர் எடுத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதனை தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா உடனடியாக செயல்பட்டு இந்திய ராணுவத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிற்கு மின்னஞ்சல் கடிதம் அனுப்பியதோடு துறை உயரதிகாரிகளிடம் தொலைபேசியில் பேசினார். இவரது கோரிக்கையை ஏற்று உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் திருச்சிக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *