ப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாளான மே 12ஆம் தேதி உலகம் முழுவதும் உலக செவிலியர் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவமனை டீன் வனிதா தலைமையில் உலக செவிலியர் தின விழா கேக் வெட்டிக் கொண்டாட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கு மேற்பட்ட செவிலியர்கள் கலந்துகொண்டு மெழுகுவர்த்தியை ஏற்றி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

அதனை தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் ஜோதிஅருள் செவிலியர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். நிகழ்வில் மருத்துவர் கலாவதி, மருத்துவர் இலட்சுமி நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்