பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜி செட்டியார் வயது 71 இவருக்கு சொந்தமான 88 செண்ட் நிலத்தை அதே பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்துக் கொண்டதாக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

புகாரின் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இன்று விடியற்காலை 6.00 மணிக்கு ஐஜி அலுவலகத்திற்கு வந்த அவர் நீண்ட நேரம் காத்திருந்த பிறகு திடீரென 10 மணி அளவில் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றியுள்ளனர்

 

இதை பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் கண்டதும் ஓடி வந்து உடனடியாக தடுத்து நிறுத்தி அவரிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர்.

மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்த இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். ஐஜி அலுவலகம் முன்பு இருவர் மன்னனை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *