திருச்சி மாநகர காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட வாகனங்களை பொது ஏலத்தில் விற்பனை செய்யும் பொருட்டு கடந்த சில நாட்களுக்கு முன் பொது ஏலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனடிப்படையில் இன்று திருச்சி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் காவல் துணை ஆணையர் தெற்கு மற்றும் கேகே நகர் சரக காவல் உதவி ஆணையர் ஆகியோர் முன்னிலையில்

திருச்சி மாநகர காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 13 இரண்டு சக்கர வாகனங்கள் ஒரு டெம்போ டிராவல் 2 ஜீப்புகள் ஆக மொத்தம் 16 வாகனங்கள் பொது ஏலம் விடப்பட்டது இந்த பொது ஏலத்தில் விடப்பட்ட வாகனங்களின் மொத்த தொகை 3,39,080 ரூபாய் ஜிஎஸ்டி வரிகள் உள்பட அரசு கணக்கில் செலுத்தப்பட்டது. இதேபோன்ற திருச்சி மாநகர காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட வாகனங்களை விருப்பமுள்ளவர்கள் அதை எடுத்துக் கொள்ளத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *