திருச்சி மதுரை ரோடு ஜீவா நகரை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் முகேஷ் குமார். இவர் மரக்கடை பகுதியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலையில் பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு செல்லாமல் திருச்சி மேல சிந்தாமணி பகுதியிலுள்ள காவிரி ஆற்று காந்தி படித்துறையில் குளித்தார். அப்போது, ஆற்றில் தண்ணீர் வேகம் அதிகமாக இருந்ததால் மாணவர் முகேஷ்குமார் தண்ணீர் வேகத்தில் ஆற்றுக்குள் இழுத்து செல்லப்பட்டார்.

இதை பார்த்த அங்கு குளித்துக்கொண்டிருந்தவர்கள் மீட்க முயற்சி தோல்வி அடைந்ததால் இதுகுறித்து கோட்டை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மாணவரின் பையிலிருந்து பெயர், விலாசம் எடுத்து அவரது பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு குழுவினர் பல்வேறு பகுதியில் தேடி பார்த்தனர். ஆனால் மாணவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இரவு நேரமானதால் தேடும் பணி நிறுத்தப்பட்டு மீண்டும் இன்று காலை முதல் மாணவரை தேடும் பணி நடைபெற்று வந்தது இந்நிலையில் மாணவனின் உடல் ஒட்டக்குடி பகுதியில் சடலமாக மீட்கப்பட்டது.. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *