திருச்சி ஸ்ரீரங்கம், மூலத்தோப்பு அகிலாண்டேஸ்வரி கார்டன் அருகில் காவிரி ஆற்றின் இடது கரை மற்றும் ஸ்ரீரங்கம் நாட்டு வாய்க்கால் வலது கரையில் அமைக்கப்பட்டுள்ள வெள்ளத் தடுப்புச் சுவரில், காவிரி ஆற்றின் தண்ணீர் வரத்து அதிகரித்ததன் காரணமாக மண் அரிப்பினால் முப்பது மீட்டர் நீளத்திற்கு தடுப்புச் சுவர் சரிந்ததைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்டுள்ள வெள்ளத் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று மாலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார். அருகில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் இராமமூர்த்தி, மாநகராட்சி மேயர் அன்பழகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *