திருச்சி மண்ணச்சநல்லுார் பகுதியை சேர்ந்த 12-ம் வகுப்பு படிக்கும் மாணவன் சுதர்சன் வயது 18. இன்று விடுமுறை என்பதால் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றுள்ளான். அப்போது யாரும் எதிர்பார்க்காத விதமாக திடீரென நீரில் மூழ்கி உயிருக்குப் போராடி தத்தளித்தார். அருகில் இருந்த நண்பர்கள் மற்றும் கொள்ளிடம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சிலர் பள்ளி மாணவன் சுதர்சனை காப்பாற்ற முயற்சித்தனர். எவ்வளவு போராடியும் ஆற்றில் மூழ்கிய மாணவனை காப்பாற்ற முடிய வில்லை. இதுகுறித்து ஸ்ரீரங்கம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கொள்ளிடம் ஆற்றில் நீண்ட நேரம் தேடி ஆற்றிலிருந்து சடலமாக பள்ளி மாணவன் சுதர்சனை மீட்டனர். இதுகுறித்து மண்ணச் சநல்லூர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *