திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை மற்றும் ஜமால் முகமது கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் திருச்சி மாநகர காவல் துறையினர் இணைந்து மாபெரும் பார்வை இழப்பை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு வீதி நாடகம் நடத்தினர். இவ்விழிப்புணர்வு வீதி நாடகத்தை திருச்சி காவல்துறை ஆணையர் சத்யபிரியா தொடங்கி வைத்தார். மேலும் ஜோசப் கண் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் பிரதீபா முன்னிலையில் நடைபெற்றது.

மேலும் ஜமால் முகமது கல்லூரி முதல்வர் இஸ்மாயில் மைதீன் செயலாளர் காஜா மைதீன் மற்றும் திருச்சி காவல்துறை உதவியாளர் சுரேஷ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். குறிப்பாக பார்வை இழப்பை தடுப்புக்கான சர்வதேச அமைப்பின் கூற்றுப்படி 2020 ஆம் ஆண்டு 43 மில்லியன் மக்கள் பார்வையாளர்களாக உள்ளனர்.257 மில்லியன் மக்கள் லேசான பார்வை உடையவர்களாகவும் 57 பேர் presbyopia -வால் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே இந்த விழிப்புணர்வை மக்களுக்கு உணர்த்தும் வகையில் இந்த வீதி நரகம் நடைபெற்றது.

இந்த வீதி நாடகத்தில் சர்க்கரை நோயினால் கண்களில் ஏற்படும் விளைத்திரை தொடர்பான நோய்கள் கண்புரை மாறு கண் மற்றும் கண்ணீர் அழுத்தம் போன்ற நோய்கள் குறித்தும் இதனால் ஏற்படும் பார்வையில் தடுப்பது என்பது குறித்து மக்களுக்கு நடித்து காண்பிக்கப்பட்டது இதில் சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். விழிப்புணர்வுக்கான ஏற்பாடுகளை ஜோசப் கண் மருத்துவமனை நிர்வாக அலுவலர் சுபா பிரபு மற்றும் திருச்சி காவல் துறை ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் செய்து இருந்தனர்.மேலும் இந்த வீதி நாடகம் திருச்சி மாவட்டத்தில் முக்கிய இடங்களில் இந்த வாரம் முழுவதும் நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *