திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமான போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி விமான நிலையத்திலிருந்து துபாய் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.


அப்போது ஒரு பயணி அட்டை பெட்டியில் 10 ஆயிரம் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் ரூபாய் 8 லட்சத்து 5 ஆயிரத்து 500) மறைத்து வைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் வெளிநாட்டு கரன்சிகளை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *