திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் திருச்சி நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் பணிமனை திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா அருகே இன்று திறக்கப்பட்டது இந்த தேர்தல் பணிமனையை திமுக முதன்மைச் செயலாளரும், தமிழக நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலை வகித்தார். அருகில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் துரை வைகோ, மாநில துணை பொதுச்செயலாளர் டாக்டர் ரொகையா காங்கிரஸ் கட்சி திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ரெக்ஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிடும் திருச்சி நாடாளுமன்ற தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோ பீமா நகர் பகுதியில் உள்ள செடல் மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து தனது முதல் பிரச்சாரத்தை இன்று துவக்கினார் ‌ இந்த தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் கே என் நேரு வேட்பாளர் துரை வைகோவுக்கு ஆதரவாக வாக்காளர் பெருமக்களிடம் வாக்கு சேகரித்து உரையாற்றினார். இந்த தேர்தல் பிரச்சாரத்தில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற தோழமை கட்சியின் நிர்வாகிகள், ஆதரவு அமைப்பு நிர்வாகிகள், மறுமலர்ச்சி திமுக தோழர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *