ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெற்று வரும் வைகுண்ட ஏகாதேசி திருவிழாவையொட்டி தமிழக கவர்னர் ஆர்.என். ரவி மற்றும் அவரது மனைவி ஆகியோர் நேற்று காலை கருடாழ்வார் சந்நிதி, மூலவர் ரெங்கநாதர் சந்நிதி, தாயார் சந்நிதி, சக்கரத்தாழ்வார் சந்நிதி, ராமானுஜர் சந்நிதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பட்டயம் வழங்கினார். முன்னதாக நேற்று முன்தினம் ஹெலிகாப்டர் விபத்தில் வீரமரணமடைந்த இந்திய முப்படை தளபதி பிபின் ராவதின் படத்திற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அருகில் அமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கலெக்டர் சிவராசு மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இன்று திருச்சியில் இருந்து சென்னைக்குச் செல்ல சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்த தமிழக கவர்னர் ஆர்.என். ரவி அவர்களுக்கு மாவட்ட கலெக்டர் சிவராசு பூங்கொத்து வழங்கி வழியனுப்பினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *