திருச்சி பழைய பால்பண்ணை சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக இருந்து வந்தது . தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டு , பொதுமக்களும் , வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாவதை சீர்செய்யும் பொருட்டு , காவல் ஆணையர் கார்த்திகேயன் அவர்கள் அறிவுறுத்தலின்படி , புதிதாக தானியங்கி போக்குவரத்து சிக்னல் ( Timer ) அமைக்கப்பட்டு , கடந்த ஒரு மாத காலமாக பரிசோதனை முறையில் ( முன்னோட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது . மேற்கண்ட பரிசோதனை முறையில் சிக்னல் அமைக்கப்பட்டதற்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றதையடுத்து , இன்று காலை புதிய போக்குவரத்து சிக்னலை முறைப்படி திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார் .

மேலும் பொதுமக்கள் சிக்னலை கவனித்து வாகனங்களை ஓட்டுவதற்கும் , அவர்களுக்கு தேவையான அறிவுரைகள் வழங்கவும் , ஒலி பெருக்கி சாதனம் அமைக்கப்பட்டு , பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது . மேலும் இந்த சிக்னலில் ITMS Camera ( Intelligent Traffic Management System Camera ) அமைக்கப்பட்டள்ளது . பழைய பால்பண்ணை சந்திப்பை கடந்து செல்லும் வாகன ஓட்டுநர்கள் அனைவரும் போக்குவரத்து விதியை மதித்து வாகனங்களை இயக்கி , விபத்தினை தடுக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது . போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் செல்லும் வாகன ஓட்டுநர்கள் மீது போக்குவரத்து விதிகளின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு , நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார் . திருச்சி மாநகரத்தில் சாலை விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையிலும் , போக்குவரத்து நெரிசல் மற்றும் போக்குவரத்து இடையூறின்றி சீரக இயங்கவும் , பொதுமக்கள் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில் போக்குவரத்து சிக்னல் ஏற்படுத்தப்பட்டு , நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்தார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *