இந்திய நாட்டின் 76-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த வகையில் நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி கொண்டாடினர்.

இதன் ஒரு பகுதியாக திருச்சியில் பிரசித்தி பெற்ற கோவிலும் தென் கயிலாயம் என்றும் 274 சைவத் திருத்தலங்களுள் பிரசித்தி பெற்றதுமான திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி திருக்கோயிலில்76 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றப்பட்டது.

தேசிய கொடியினை கோயில் உதவி ஆணையர் மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் உதவி ஆணையர் ஹரிஹர சுப்பிரமணியன் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் திருக்கோயில் அர்ச்சகர்கள் பக்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தற்பொழுது திருச்சி மலைக்கோட்டையின் உச்சியில் கம்பீரமாக பட்டொளி வீசி பறக்கிறது மூவர்ணக் கொடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்