திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தில் உள்ள சிறுகுறு தொழில்கள் சங்கமான டிடிட்சியா அலுவலகத்தில் 54வது பேரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பது வழக்கம் இந்நிலையில் 2021- 2023 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதன்படி புதிய சங்க தலைவராக ராஜப்பா,செயலாளராக கோபாலகிருஷ்ணன், பொருளாளராக ராஜு ரெபரோ, துணை தலைவராக தேவராஜ், ராஜாராம் மற்றும் அன்பு,துணை செயலாளராக செல்லக்குட்டி மற்றும் சண்முகம், ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்து எடுக்கப்பட்டனர். இந்த நிகழ்வில் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *