துபாயில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வரும் பயணிகள் தங்கம் கடத்தி வருவதாக மத்திய புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்ததில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம் வயது 34 என்பவரது உடமைகளை சோதனை செய்ததில் 1.5 கிலோ தங்கம் (73 லட்சம்) எலக்ட்ரானிக் பொருட்களுக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதேபோல் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஷேக் தாவூத் வயது 32 என்பவர் ஆசனவாயில் மறைத்து 575 கிராம் தங்கம் (28 லட்சம்) கடத்தி வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இருவரிடமிருந்து 1- கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *