சென்னையிலிருந்து விமான மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்த முன்னாள் முதலமைச்சரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கழக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர் செல்வத்திற்கு முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் திருச்சி அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மேலும் ஜவஹர்லால் நேரு வெல்லமண்டி உள்ளிட்ட திருச்சி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் சால்வை, பூங்கொத்து கொடுத்து வரவேற்பளித்தனர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கார் மூலம் பெரிய குளத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *