திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள கூத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியின் 17வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது இந்த ஆண்டு விழாவில் மாணவர்கள் வரவேற்புரை ஆற்றிட, பள்ளி சேர்மன் கோபிநாதன் தலைமை தாங்கினார்.

விழாவில் பள்ளி அறங்காவலர் லட்சுமி பிரபா கோபிநாதன் வாழ்த்துரை வழங்கினார். இயக்குனர் வரதராஜன் மற்றும் கல்வி ஆலோசகர் மலர்விழி, பள்ளி முதல்வர் தயானந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா பள்ளியின் அறங்காவலர் சகுந்தலா விருதாச்சலம் தலைமை உரையாற்றினார்.

விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக சென்னை சீசில் மற்றும் எவெலிவ் நிறுவனர் ஷியாமளா ரமேஷ்பாபு கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். ஆண்டு விழாவில் சிபிஎஸ்சி போர்டு எக்ஸாமினேஷனில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 10-ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு கேஷ் அவார்ட் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியின் பயிலும் மாணவ மாணவிகளின் பரதநாட்டியம், குரூப் நடனம், பாடல், நாடகம் தனித்திறமைகள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றது. இந்த ஆண்டு விழாவில் ஏராளமான மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *