திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 45 வது வார்டு பகுதியில் பொன்னேரிபுரம் முல்லை நகர் பொன்மலைப்பட்டி அடைக்கல அன்னை நகர் காந்தி நகர் செங்கோல் உடையார் தெரு திருநகர் உள்ளிட்ட பகுதிகளில் 400க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அதிலும் திருச்சி மாநகராட்சியால் பொன்னேரிபுரம் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்து பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்த மருத்துவமனை இங்கு வந்தால் இந்த பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் பயன் பெறுவார்கள் ஆனால் இதை தடுக்கும் நோக்கில் சில நபர்கள் இந்த கட்டுமான பணியை தடுத்து நிறுத்தும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆகவே ஆரம்ப சுகாதார நிலையத்தை விரைந்து கட்டி முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொன்மலை பகுதி செயலாளர் விஜயேந்திரன் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கார்த்திகேயன் மாவட்ட குழு மணிமாறன் உள்ளிட்ட அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருச்சி மாவட்ட கலெக்டரின் உதவியாளரிடம் மனு அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *