தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் கடந்த 22-ம் வாக்கு எண்ணிக்கையின் போது திருச்சி 56-வது வார்டு திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் PRB மஞ்சுளாதேவி 4323 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

அதனைத் தொடர்ந்து 56-வது வார்டில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் PRB மஞ்சுளாதேவி மற்றும் அவரது கணவர் PRB பாலசுப்பிரமணியன் ஆகியோர் திமுக கழக முதன்மை செயலாளரும், தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என் நேருவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இந்நிலையில் திருச்சி மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த மாமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழாவில்

56-வது வார்டு மாமன்ற உறுப்பினராக PRB மஞ்சுளாதேவி மாநகராட்சி கமிஷனர் முஜிபூர் ரகுமான் முன்னிலையில் உறுதிமொழி வாசித்து, கையொப்பமிட்டு பதவி ஏற்றுக்கொண்டார். அருகில் அவரது கணவர் PRB பாலசுப்பிரமணியன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *