BSNL நிறுவனத்திற்கு 4G , 5G அனுமதியை மத்திய அரசு உடனே வழங்கிட வலியுறுத்தி திருச்சியில் பல்வேறு இடங்களில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் “செல்பி வித் BSNL” நூதன போராட்டம் நடைபெற்றது.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தின் பெரியார் சிலை முன்பு நடைபெற்ற இயக்கத்தில் மாநில இணைச் செயலாளர் பால சந்திரபோஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேதுபதி, BSNLU நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல் திருச்சி BSNL அலுவலகம் முன்பு நடைபெற்ற இயக்கத்தில் மாநில இணை செயலாளர் பால சந்திரபோஸ். மாவட்ட செயலாளர் பா.லெனின், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேதுபதி, SFl மாவட்ட செயலாளர் மோகன் உள்ளிட்ட பல்வேறு தோழர்கள் கலந்து கொண்டனர்.

பாலக்கரை பகுதி குழு சார்பில் நடைபெற்ற இயக்கத்தில் மாவட்ட தலைவர் தோழர் சுரேஷ், பகுதி தலைவர் ஷாஜகான், நிர்வாகிகள் மொய்தீன்,விஷ்ணு, சூர்யா உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். காட்டூர் பகுதி குழு சார்பில் திருவெறும்பூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இயக்கத்தில் மாவட்ட செயலாளர் பா.லெனின், பகுதித் தலைவர் யுவராஜ், நிர்வாகிகள் செந்தில்,சந்தோஷ், முருகா,மோகன், வெங்கடேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற இயக்கத்தில் மாவட்ட செயலாளர் லெனின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேதுபதி எஸ்எப்ஐ மாவட்ட செயலாளர் மோகன் கிளை நிர்வாகிகள் முகேஷ், மகேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். காந்தி மார்க்கெட், உறையூர், அந்தநல்லூர், மணிகண்டம் உள்ளிட்ட இடங்களில் இயக்கம் நடத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *