தேசிய அளவிலான 7-வது ஏரோஸ் கேட்டோபால் (AEROSKATOBALL)
விளையாட்டு போட்டி மார்ச் மாதம் 4,5 மற்றும் 6ஆம் தேதிகளில் மிக பிரமாண்டமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசிய அளவில் சேட்டன் பகவாட் தலைமையில் நடைபெற்றது. இந்த விளையாட்டுப் போட்டியில் பல மாநிலங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தின் சார்பாக தமிழ்நாடு ஏரோஸ் கேட்டோபால் அசோசியன் சங்கம் தலைவர் ராகேஷ் சுப்பிரமணியன் தலைமையில், சங்க பொதுச்செயலாளர் பிரவீன் ஜான்சன் மற்றும் பொருளாளர் தங்க முருகன் ஆகியோர் சிறந்த முறையில் பயிற்சியாளர்களை கொண்டு 55 க்கும் மேற்பட்ட மாணவர்களை பங்கேற்க செய்துள்ளனர். ‌

இதில் 10 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவு, 14 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவு, 18 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவி, 18 வயதுக்கு மேல் உள்ள ஆண்கள் பிரிவு, 10 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவு, 14 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவு ஆகிய பிரிவுகள் அனைத்திலும் தமிழ்நாட்டு மாணவர்களே முதல் இடத்தை பிடித்தனர், தேசிய அளவில் தமிழ்நாடு மாணவர்கள் முதல் இடத்தையும், மகாராஷ்டிரா மாணவர்கள் இரண்டாம் இடத்தையும், ராஜஸ்தான் மாணவர்கள் மூன்றாம் இடத்தையும் கைப்பற்றினர். குறிப்பாக தமிழ்நாட்டு மாணவர்கள் பெற்று கோப்பையை கைப்பற்றி தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

மாணவர்களை திறம்பட பயிற்சி பெற செய்த அபுதாஹீர், அருள் பிரகாஷ், மற்றும் பாலன் மகேந்திரன் ஆகியோருடன் இணைந்து பெற்றோர்கள் திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள சாலையில் வெற்றி பெற்ற மாணவர்களை மகிழ்ச்சியுடன் உற்சாகமாக வரவேற்று இனிப்புகள் வழங்கியும், தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் பயிற்சி யாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து மகளிர் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *